search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை வழிப்பறி"

    நகைகளை அடமானம் வைத்ததையும், விற்றதையும் மறைப்பதற்காக வங்கியில் இருந்து நகை எடுத்து வரும்போது கொள்ளை போனதாக நடிகர் செந்திலின் உறவினர் நாடகமாடியது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. #JewelRobbery
    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பழைய தாலுகா அலுவலக வீதியைச் சேர்ந்தவர் குருவலிங்கம். இவரது மனைவி உமா (வயது 43).

    இவர் கமுதி போலீசில் கொடுத்த புகார் மனுவில், தான் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்த 300 பவுன் நகையை, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் பறித்துச்சென்று விட்டதாக தெரிவித்திருந்தார்.

    பட்டப்பகலில் நடைபெற்றதாக கூறப்பட்ட இந்த சம்பவம் கமுதி போலீசாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வழிப்பறி திருடர்களை பிடிக்க அனைத்து பகுதி போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர்.

    சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆனால் உமா குறிப்பிட்ட நேரத்தில் மோட்டார் சைக்கிள் எதுவும் சென்றதாக பதிவாகவில்லை.

    இதனால் துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம், கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் உமாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அவரது பேச்சு போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து உமாவிடம் கிடுக்கிப்படி கேள்வி கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் அவரை ரகசிய இடம் கொண்டு சென்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில் 300 பவுன் நகை வழிப்பறி என உமா நாடகமாடுவது அம்பலமானது. இதுபற்றி போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

    வழிப்பறி நாடகமாடிய உமாவின் சகோதரி சண்முக வடிவு. இவரது கணவர் பூபதிராஜா. சினிமா பட தயாரிப்பாளர். இவர்கள் நகைச்சுவை நடிகர் செந்திலின் உறவினர்கள்.

    சென்னையில் வசிக்கும் சண்முகவடிவு, தனக்குச் சொந்தமான 300 பவுன் நகைகளை சகோதரி உமாவிடம் கொடுத்து ராமநாதபுரம் மாவட்ட வங்கி லாக்கரில் வைக்கும்படி தெரிவித்துள்ளார்.

    அதனை பெற்றுக் கொண்ட உமா, வங்கி லாக்கரில் நகைகளை வைக்கவில்லை. 150 பவுன் நகைகளை 8 வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார். மீதமுள்ள நகைகளை விற்றுவிட்டார்.

    வங்கி லாக்கரில் தானே நகைகள் இருக்கிறது என்று சண்முகவடிவு நினைத்து அதுபற்றி உமாவிடம் எதுவும் கேட்கவில்லை.

    இந்த நிலையில் சண்முகவடிவு மகனுக்கு, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று திருமணம் நடக்க முடிவானது. இதனை முன்னிட்டு வங்கி லாக்கரில் இருக்கும் 300 பவுன் நகைளை எடுத்து வரும்படி சண்முகவடிவு கூறினார். இதனால் உமா அதிர்ச்சி அடைந்தார்.

    நகைகளை அடமானம் வைத்ததையும், விற்றதையும் மறைத்து விட்டு, வங்கியில் இருந்து எடுத்து வரும்போது வழிப்பறி செய்யப்பட்டதாக உமா நாடகமாடியுள்ளார்.

    ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் நாடகம் அம்பலமாகி விட்டது. இந்த விவகாரத்தில் உமாவுக்கு வேறு யாரும் உதவி உள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JewelRobbery

    ×